திருப்பூரில் நியாயவிலை கடையில் தக்காளி விற்பனை செய்யும் திட்டம் - ஆட்சியர் துவக்கி வைப்பு!

தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நியாய விலை கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.



திருப்பூர்: திருப்பூரில் நியாய விலை கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் எந்த ஆண்டிலும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஜூலை மாத துவக்கத்திலிருந்தே பருவமழை துவங்கிவிட்டது. இதனால், போதுமான காய்கறிகளின் விளைச்சல் இல்லாமல் அனைத்து காய்கறிகளின் விலையும் இரட்டிப்பு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தக்காளியின் விலை கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே ரூபாய் 130 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முதல்வரின் உத்தரவின் பேரில், பொது மக்களின் வசதிக்காக, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நியாய விலை கடைகளின் மூலமாக தக்காளியின் விலை கிலோவுக்கு ரூபாய் 60 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 10 நியாய விலை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.



திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சாலை பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் விற்பனையை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். ஒரு கடையில் ஒரு நபருக்கு 1 கிலோ வீதம் 50 பேருக்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து வரும் நாட்களில் கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...