திருப்பூரில் வரும் ஜூலை 14ல் கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி துவக்கம்!

திருப்பூரில் வரும் ஜூலை 14ஆம் தேதி சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சார்பில் கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் நடைபெற உள்ள இந்த கண்காட்சியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூரில் சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சார்பில் கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சி வரும் ஜூலை 14ஆம் தேதி துவங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சார்பாக வருடம் தோறும் கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். ஆண்டுதோறும் புதிய வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கட்டடங்களுக்கு தேவையான பொருட்கள் குறித்த அறிமுக விழாவாகவும் இந்த கண்காட்சி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு வருகின்ற 14-ஆம் தேதி 18-வது கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சி துவங்கப்பட இருப்பதாகவும், 200க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்ட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு பசுமை சார்ந்த கட்டிடங்கள் மற்றும் மரபு சார்ந்த கட்டிடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், பொதுமக்கள் கட்டிடங்களுக்கு தேவையான அனைத்து வகை சேவைகளையும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.



மேலும் வர்த்தகர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு இடையே இணைப்பு பாலமாக இருக்கக்கூடிய வகையில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும், இதன் மூலம் இந்த ஆண்டு வர்த்தகத்தில் சிறந்து விளங்கக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



வருகின்ற ஜூலை 14ஆம் தேதி துவங்க உள்ள இந்த கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சியை மாநில செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில் புத்தக வெளியீட்டை நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் வெளியிடுகிறார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 200 முதல் 250 கோடி ரூபாய் வரையிலான வர்த்தக விசாரணை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் நடைபெற உள்ள இந்த கண்காட்சிகள் கலந்து கொள்ளக்கூடிய பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குலுக்கல் முறையில் பரிசுகளும் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...