திருப்பூரில் வரும் ஜூலை 14ல் கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி துவக்கம்!

திருப்பூரில் வரும் ஜூலை 14ஆம் தேதி சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சார்பில் கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் நடைபெற உள்ள இந்த கண்காட்சியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூரில் சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சார்பில் கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சி வரும் ஜூலை 14ஆம் தேதி துவங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சார்பாக வருடம் தோறும் கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். ஆண்டுதோறும் புதிய வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கட்டடங்களுக்கு தேவையான பொருட்கள் குறித்த அறிமுக விழாவாகவும் இந்த கண்காட்சி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு வருகின்ற 14-ஆம் தேதி 18-வது கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சி துவங்கப்பட இருப்பதாகவும், 200க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்ட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு பசுமை சார்ந்த கட்டிடங்கள் மற்றும் மரபு சார்ந்த கட்டிடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், பொதுமக்கள் கட்டிடங்களுக்கு தேவையான அனைத்து வகை சேவைகளையும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.



மேலும் வர்த்தகர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு இடையே இணைப்பு பாலமாக இருக்கக்கூடிய வகையில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும், இதன் மூலம் இந்த ஆண்டு வர்த்தகத்தில் சிறந்து விளங்கக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



வருகின்ற ஜூலை 14ஆம் தேதி துவங்க உள்ள இந்த கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சியை மாநில செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில் புத்தக வெளியீட்டை நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் வெளியிடுகிறார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 200 முதல் 250 கோடி ரூபாய் வரையிலான வர்த்தக விசாரணை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் நடைபெற உள்ள இந்த கண்காட்சிகள் கலந்து கொள்ளக்கூடிய பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குலுக்கல் முறையில் பரிசுகளும் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...