கோவையில் தனியார் நிறுவனத்தில் பால் வால்வுகளை திருடிய ஊழியர் கைது!

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பால் வால்வுகளை திருடியதாக அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த சந்தோஷ்குமார் என்பவரை துடியலூர் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.




கோவை: கவுண்டம்பாளையம் அருகேயுள்ள தனியார் நிறுவனத்தில் பால் வால்வுகளை திருடிய அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கவுண்டம்பாளையம் அடுத்த டிவிஎஸ் நகர் சாலையில் உள்ளது காவேரி குரூப் ஆப் கம்பெனி என்ற நிறுவனத்தில் சேல்ஸ் எக்ஸ்கியூட்டிவாக பணிபுரிந்து வருபவர் சந்தோஷ் குமார்.

இவர் நேற்று இருசக்கர வாகன பார்க்கிங் பகுதியில் சந்தேகத்திடமான வகையில் நின்று கொண்டிருப்பதை பார்த்த நிறுவன பொருப்பாளர் அவரது இருசக்கர வாகனத்தை சோதனை செய்துள்ளார்.

அப்போது அதில் 6 பால் வால்வுகள் திருடி மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தார். இதையடுத்து துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சேரன் நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமாரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...