கோவையில் தனியார் நிறுவனத்தில் பால் வால்வுகளை திருடிய ஊழியர் கைது!

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பால் வால்வுகளை திருடியதாக அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த சந்தோஷ்குமார் என்பவரை துடியலூர் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.




கோவை: கவுண்டம்பாளையம் அருகேயுள்ள தனியார் நிறுவனத்தில் பால் வால்வுகளை திருடிய அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கவுண்டம்பாளையம் அடுத்த டிவிஎஸ் நகர் சாலையில் உள்ளது காவேரி குரூப் ஆப் கம்பெனி என்ற நிறுவனத்தில் சேல்ஸ் எக்ஸ்கியூட்டிவாக பணிபுரிந்து வருபவர் சந்தோஷ் குமார்.

இவர் நேற்று இருசக்கர வாகன பார்க்கிங் பகுதியில் சந்தேகத்திடமான வகையில் நின்று கொண்டிருப்பதை பார்த்த நிறுவன பொருப்பாளர் அவரது இருசக்கர வாகனத்தை சோதனை செய்துள்ளார்.

அப்போது அதில் 6 பால் வால்வுகள் திருடி மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தார். இதையடுத்து துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சேரன் நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமாரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...