பல்லடம் அடுத்த கரைப்புதூரில் வரதட்சனை கேட்டு காதல் மனைவிக்கு அடி உதை!

பல்லடம் அருகே கரைப்புதூர் பகுதியில் வரதட்சனை கேட்டு காதல் மனைவியை கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரத்த காயத்துடன் இளம் பெண் கை உடைந்த நிலையில் பல்லடம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


திருப்பூர்: பல்லடம் அருகே கரைப்புதூர் பகுதியில் வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கி கையை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி தொட்டி அப்பிச்சி கோவில் அருகில் உள்ள ராஜலட்சுமி நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் என்பவரது மகள் ரூபினி (24). இவரும் கரைப்புதூர் அண்ணா நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜா (24) இருவரும் கல்லூரி படிக்கும் போது இருந்து ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இருவரும்வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை.



இந்த நிலையில் ரூபினியின் அக்கா கணவர், பழனிவேல் ராஜா மற்றும் ரூபினி இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து வைத்துள்ளார்.

சென்னை போரூரில் தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக ராஜா வேலைக்கு சேர்ந்ததால் ரூபினியை சென்னைக்கு அழைத்து சென்று வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதோடு கடந்த ஒரு மாதமாக வரதட்சனை கேட்டு ரூபினியை ராஜா அடித்து துன்புறுத்தி ரூபினின் கையை உடைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு சென்னையில் இருந்து பல்லடம் கரைப்புதூர் அழைத்து வந்து தனது தந்தை ராஜேந்திரனின் வீட்டில் வைத்து மீண்டும் ரூபினியை ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் சரமாரியாக தாக்கியதில் ரூபிணி ரத்தம் சொட்ட சொட்ட வீட்டிற்கு வெளியே தப்பித்து வந்து அக்கம் பக்கத்தினரின் உதவியோடு போலீசாரின் அவசர தொலைபேசி எண்ணிற்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்து பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.



இதுகுறித்து ரூபினி பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி கையை முறித்த ராஜா மற்றும் அவர்களது குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரூபினியின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...