கோவை பி.கே.புதூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு - பரபரப்பு!

குனியமுத்தூர் அடுத்த பி.கே.புதூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் செயினை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் பறித்துச் சென்ற சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்


கோவை: குனியமுத்தூர் அருகேயுள்ள பி.கே.புதூர் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் குனியமுத்தூர் அடுத்த பி.கே புதூர் ஸ்ரீநகர் காலனியை சேர்ந்தவர் ஈஸ்வரன், இவரது மனைவி பிரேமா கடந்த ஜூலை 4ஆம் தேதி தனது வீட்டின் அருகேயுள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்று விட்டு, மீண்டும் தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது குளத்துப்பாளையம் சாலை பாலு கார்டன் அருகே வந்த போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் திடீரென பிரேமா கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க செயினை பறிக்க முயன்றார்.

அப்போது பிரேமா செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டதால் அரை சவரன் எடை கொண்ட செயினில் ஒரு பகுதியை பிடுங்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து பிரேமா குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...

நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, IAS பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது...

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...