மாமன்ற கூட்டத்தில் பேச உரிய அங்கீகாரம் வேண்டும் - அதிமுக உறுப்பினர்கள் திருப்பூர் மேயரிடம் கோரிக்கை மனு!

மாமன்ற கூட்டத்தில் பேச உரிய அங்கீகாரம் வழங்க வலியுறுத்தி, திருப்பூரில் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில், அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மேயர் தினேஷ்குமாரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.



திருப்பூர்: மாமன்ற கூட்டத்தில் பேச உரிய அங்கீகாரம் வழங்க வலியுறுத்தி, அதிமுக உறுப்பினர்கள் மேயரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் அதிமுகவைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.



அந்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாநகராட்சியில் விதிக்கப்பட்டுள்ள குப்பை வரி சம்பந்தமான சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும். மாநகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள குப்பை வரி, சொத்து வரி, தண்ணீர் வரி உள்ளிட்டவை குறித்து மேல்முறையீட்டு குழு அமைக்க வேண்டும்.

மேலும், மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்.

இவ்வாறான கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...