கோவை அருகே போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் போல நடித்து மளிகை கடையில் ரூ.1.70 லட்சம் பறிப்பு!

கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் எனக்கூறி மளிகைக்கடையில் சோதனை நடத்துவது போல் நடித்து ரூ.1.70 லட்சம் பறித்துக்கொண்டு தப்பிச்சென்ற 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் போல நடித்து ரூ.1.70 லட்சம் பறித்துச்சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை குனியமுத்தூர் அடுத்த இடையர்பாளையம் சர்ச் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(52). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது கடைக்கு காரில் வந்த 3 பேர் பாலகிருஷ்ணனிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் என அறிமுகம் செய்து கொண்டுள்ளனர்.

பின்னர் கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் வந்துள்ளது. எனவே, சோதனை செய்ய வேண்டும் என தெரிவித்து கடைக்குள் சென்று சோதனை செய்தனர். அப்போது கடையில் இருந்து சில ஹான்ஸ் பாக்கெட்டுகளை எடுத்தனர்.

மேலும் கல்லாவில் இருந்த ரூ. 2 லட்சத்தையும் எடுத்து கொண்டு, பாலகிருஷ்ணனிடம் உங்களுக்கு புகையிலை பொருட்கள் சப்ளை செய்வது யார்? என காட்டுங்கள் என கூறி பாலகிருஷ்ணனையும், அவரது மகனையும் தாங்கள் வந்த காரில் ஏற்றி அழைத்து சென்றனர்.

சுந்தராபுரம் காமராஜர் தெரு அருகே சென்ற போது காரை நிறுத்திய 3 பேர் கும்பல்ம் தாங்கள் கடையில் எடுத்த ரூ. 2 லட்சத்தில், ரூ. 30 ஆயிரம் மட்டும் பாலகிருஷ்ணனிடம் கொடுத்து விட்டு, யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி அவர்களை இறக்கி விட்டு சென்றனர்.

அப்போது தான் அவர்கள் மோசடி பேர்வழி என பாலகிருஷ்ணனுக்கு தெரியவந்தது. இதுகுறித்து அவர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...