வால்பாறை அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து காட்டெருமை உயிரிழப்பு!

வால்பாறை அருகேயுள்ள பச்சைமலை எஸ்டேட் தொழிலாளர்கள் பயன்படுத்தி வந்த குடி தண்ணீர் கிணற்றில் காட்டெருமை ஒன்று தவறி விழுந்து உயிரிழந்த நிலையில் வனத்துறை அதிகாரிகள் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு காட்டெருமை உடலை மீட்டு அடக்கம் செய்தனர். என் பின்னர் தண்ணீர் சுத்தம் செய்த பிறகு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.



கோவை: வால்பாறை அருகே குடிதண்ணீர் கிணற்றில் காட்டெருமை ஒன்று தவறி விழுந்து உயிரிழந்துள்ளது.



கோவை மாவட்டம் வால்பாறை அருகே பச்சைமலை எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்களுக்கு குடி தண்ணீர் பயன்படுத்த 20 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. காலை மற்றும் மாலை தொழிலாளர்களுக்கு இயந்திரம் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.



இந்த தண்ணீர் தொட்டியானது வேலி அமைத்து பாதுகாப்பாக செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு தண்ணீர் தொட்டி வழியாக வந்த காட்டெருமை ஒன்று தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து இறந்துள்ளது.



இந்த நிலையில் இன்று காலையில் தண்ணீர் வினியோகம் செய்வதற்கு வந்த தொழிலாளி தண்ணீர் தொட்டிக்குள் காட்டெருமை இறந்து கிடப்பதை பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.



இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை வன சரகர் வெங்கடேஷ் தலைமையிலான வனத்துறை அதிகாரிகளும், எஸ்டேட் நிர்வாகத்தினரும் காட்டெருமையை உடலை பல மணி நேரம் போராடி தண்ணீர் தொட்டியில் இருந்து மீட்டு அடக்கம் செய்தனர்.

இதன் பின்னர் தண்ணீரை சுத்தம் செய்து பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...