மதுக்கரை எல்.அன்.அடி நெடுஞ்சாலையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி!

பெங்களூரை சேர்ந்த நவீன் குமார் என்பவர் நண்பர்கள் 4 பேருடன், கோவை வழியாக கேரளாவிற்கு சென்று திரும்பிய போது, மதுக்கரை எல்.அன்.டி நெடுஞ்சாலையில் எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதிய விபத்தில், படுகாயமடைந்த நவீன்குமார், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: மதுக்கரை எல்.அன்.டி நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் நவீன்குமார் (35). தனியார் நிறுவன ஊழியரான இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சுற்றுலாவிற்காக நண்பர்கள் 4 பேருடன் காரில் கோவை வழியாக கேரளாவிற்கு சென்றுள்ளார்.

பின்னர் மீண்டும் கோவை வழியாக பெங்களூர் செல்ல ஞாயிற்றுக்கிழமை இரவு வந்துள்ளனர்.



அப்போது மதுக்கரை எல்.அன்.டி நெடுஞ்சாலை ஜல்லிக்கட்டு மைதானம் அருகே வந்த போது நவீன்குமார் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே கேரளா நோக்கிச் சென்ற மற்றொரு கார் மீது மோதியது.

இதில் நவீன்குமார் உள்ளிட்ட 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அங்கு இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனை மற்றும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நவீன்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து தொடர்பாக மேற்கு போக்குவரத்து குற்றப்புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...