மதுக்கரை எல்.அன்.அடி நெடுஞ்சாலையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி!

பெங்களூரை சேர்ந்த நவீன் குமார் என்பவர் நண்பர்கள் 4 பேருடன், கோவை வழியாக கேரளாவிற்கு சென்று திரும்பிய போது, மதுக்கரை எல்.அன்.டி நெடுஞ்சாலையில் எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதிய விபத்தில், படுகாயமடைந்த நவீன்குமார், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: மதுக்கரை எல்.அன்.டி நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் நவீன்குமார் (35). தனியார் நிறுவன ஊழியரான இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சுற்றுலாவிற்காக நண்பர்கள் 4 பேருடன் காரில் கோவை வழியாக கேரளாவிற்கு சென்றுள்ளார்.

பின்னர் மீண்டும் கோவை வழியாக பெங்களூர் செல்ல ஞாயிற்றுக்கிழமை இரவு வந்துள்ளனர்.



அப்போது மதுக்கரை எல்.அன்.டி நெடுஞ்சாலை ஜல்லிக்கட்டு மைதானம் அருகே வந்த போது நவீன்குமார் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே கேரளா நோக்கிச் சென்ற மற்றொரு கார் மீது மோதியது.

இதில் நவீன்குமார் உள்ளிட்ட 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அங்கு இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனை மற்றும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நவீன்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து தொடர்பாக மேற்கு போக்குவரத்து குற்றப்புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...