மத்திய அரசை கண்டித்து கோவையில் தொழிற்சங்கங்கள் சார்பில் திறந்தவெளி மாநாடு!

அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானத்தில் திறந்தவெளி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், LPF, AITUC, HMS, MLF, INTUC உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டன.


கோவை: கோவையில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசை கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் திறந்த வெளி மாநாடு நடைபெற்றது.

நிரந்தரமற்ற தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தி சம வேலைக்கு சம ஊதியம் என்ற சட்டத்தை அமல்படுத்த வேண்டும், கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்களை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும்.



குறைந்தபட்ச மாத ஊதியம் 28 ஆயிரம் என நிர்ணயம் செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் 10,000 வழங்க வேண்டும், வேளாண் விளைபொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய சட்டம் இயற்ற வேண்டும், பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு மீதான கலால் வரியை நீக்கிட வேண்டும்.

மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும், பத்து சதவீதத்திற்கு மேல் தற்காலிக தொழிலாளர்களை நியமிக்க கூடாது, தமிழ்நாட்டில் உள்ள என்.டி.சி ஆலைகள் உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து ஆலைகளையும் உடனடியாக இயக்கி அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டும்.



இவ்வாறான 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் LPF, AITUC, HMS, MLF, INTUC உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் கோவையில் திறந்த வெளி மாநாடுகள் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி இன்று ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானத்தில் முதல் திறந்தவெளி மாநாடு நடைபெற்றது. இதில் எஸ்.எம்.எஸ். மாநில பொதுச் செயலாளர் ராஜாமணி தலைமை வகித்தார்.

மேலும் இந்த மாநாட்டில், LPF தமிழ்செல்வன், AITUC ஆறுமுகம், INTUC சண்முகசுந்தரம், CITU ரத்தினகுமார் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

Newsletter

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதா...

தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள்...

பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்...

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...

சரவணம்பட்டியில் கையகப்படுத்தப்பட்ட 73 வாகனங்கள்; உரிமையாளர்களுக்கு அழைப்பு

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லையில் கையகப்படுத்தப்பட்ட 73 இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ள பொத...