தமிழகத்தில் முதல்முறையாக அரசு பணியாளர்களின் குழந்தைகளை கவனிக்க குழந்தைகள் காப்பகம்!

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு பணிக்கு வரும் ஊழியர்களின் குழந்தைகளை கவனிப்பதற்காக பகல் நேர குழந்தைகள் காப்பகத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று துவங்கி வைத்தார். இந்த காப்பகத்தில் 4 அங்கன்வாடி ஊழியர்கள், ஒரு தனியார் ஆசிரியர் என 5 பேர் குழந்தைகளை கவனித்து கொள்ள நியமிக்கப்பட்டுள்ளனர்.



கோவை: தமிழகத்தில் முதல் முறையாக அரசு ஊழியர்களின் குழந்தைகளை கவனிப்பதற்கான சிறப்பு குழந்தை காப்பகம் கோவை ஆட்சியர் திறக்கப்பட்டுள்ளது.



பொதுவாக பணிக்குச் செல்லும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டின் அருகே உள்ள அங்கன்வாடி மையங்களில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்று வருகின்றனர். இதே போல கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு பணிக்கு வரும் ஊழியர்களின் குழந்தைகளை கவனிப்பதற்காக குழந்தைகள் பகல்நேர சிறப்பு காப்பகம் திறக்கப்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி பங்களிப்புடன் அமைக்கப்பட்டு உள்ள இந்த குழந்தைகள் காப்பகத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று துவங்கி வைத்தார்.



4 அங்கன்வாடி ஊழியர்கள், ஒரு தனியார் ஆசிரியர் என 5 பேர் குழந்தைகளை கவனித்து கொள்ள நியமிக்கப்பட்டு உள்ளனர்.



இந்த காப்பகத்தில் 7 வயதிற்குள் உள்ள குழந்தைகள் அனுமதிக்கப்படுகின்றனர்.



விளையாட்டு, உடற்பயிற்சி, மற்றும் குழந்தைகளுக்கான பாடல்களை ஒளிப்பரப்ப தொலைக்காட்சி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் விளையாடும் குழந்தைகள் கிழே விழுந்தாலும் அடிபடாமல் இருக்க மேட் போடப்பட்டு உள்ளது.



அதே போல பெற்றோர்கள் கொடுத்துச் செல்லும் உணவுகள் மட்டுமின்றி சத்து மாவுகளும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. தினமும் அரசு ஊழியர்களின் பணி நேரங்களில் இந்த காப்பகத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்குச் செல்லும் அரசு ஊழியர்களின் குழந்தைகளும் மாலை நேரத்தில் காப்பகங்களில் கவனித்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தன்னார்வ தனியார் பள்ளி பங்களிப்புடன் ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கப்பட்டுள்ள குழந்தைகள் பகல் நேர காப்பகத்திற்கு ஊழியர்கள் மத்தியில் அதிகளவு வரவேற்பு கிடைத்துள்ளது.



முதல் நாளிலேயே சுமார் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் பகல் நேர காப்பகத்தில் விடப்பட்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...