வி.கே.வி குருப்ஸ் சார்பில் 17வது ஆண்டாக ஊராட்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கல்!

நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் படிக்கும் 780 மாணவ மாணவிகளுக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான 5500க்கும் மேற்பட்ட நோட்டு புத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகளை வி.கே.வி குருப்ஸ் சார்பில் நஞ்சுண்டாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் வி.கே.வி.சுந்தரராஜ் வழங்கினார்.



கோவை: நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளியில் படிக்கும் 780 மாணவ மாணவிகளுக்கு விகேவி குழுமம் சார்பில் ரூபாய் 7 லட்சம் மதிப்பில் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

கோவை துடியலூர் அடுத்துள்ள நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு வி.கே.வி. குருப்ஸ் சார்பாக 17-ம் ஆண்டு நோட்டு புத்தகங்கள் மற்றும் புத்தகப்பை வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சிக்குட்பட்ட அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமை தாங்கினர். உதவி தலைமை ஆசிரியர்கள் வரவேற்று பேசினர். ஊராட்சி மன்ற பொறுப்பில் உள்ளவர்கள், ஊர் பெரியவர்கள், பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் முன்னிலை வகித்தனர்.



இதில் சோமையனூர் நடுநிலைப்பள்ளி, உச்சையனூர் தொடக்கப்பள்ளி, நஞ்சுண்டாபுரம் தொடக்கப்பள்ளி, இராமநாதபுரம் தொடக்கப்பள்ளி, வரப்பாளையம் தொடக்கப்பள்ளி, பாப்பநாயக்கன்பாளையம் நடுநிலை பள்ளிகளில் படிக்கும் 780 மாணவ மாணவிகளுக்கு ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 5500க்கும் மேற்பட்ட நோட்டு புத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகளை வி.கே.வி குருப்ஸ் சார்பாக நஞ்சுண்டாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் வி.கே.வி.சுந்தரராஜ் வழங்கினார்.



இந்த நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் ரங்கராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னராஜ், முன்னாள் தலைமை ஆசிரியர்கள் மாணிக்கம், சின்ராஜ், ஊராட்சி துணைத்தலைவர் திருநாவுக்கரசு, கவுன்சிலர்கள் சோமசுந்தரம், குமாரசாமி, நாகராஜ், இந்திராணி, சசிகுமார், ஆறுமுகம், புஷ்பலதா, திவியா, கிருஷ்ணவேணி, ஆனந்தன், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...