வி.கே.வி குருப்ஸ் சார்பில் 17வது ஆண்டாக ஊராட்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கல்!

நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் படிக்கும் 780 மாணவ மாணவிகளுக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான 5500க்கும் மேற்பட்ட நோட்டு புத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகளை வி.கே.வி குருப்ஸ் சார்பில் நஞ்சுண்டாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் வி.கே.வி.சுந்தரராஜ் வழங்கினார்.



கோவை: நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளியில் படிக்கும் 780 மாணவ மாணவிகளுக்கு விகேவி குழுமம் சார்பில் ரூபாய் 7 லட்சம் மதிப்பில் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

கோவை துடியலூர் அடுத்துள்ள நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு வி.கே.வி. குருப்ஸ் சார்பாக 17-ம் ஆண்டு நோட்டு புத்தகங்கள் மற்றும் புத்தகப்பை வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சிக்குட்பட்ட அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமை தாங்கினர். உதவி தலைமை ஆசிரியர்கள் வரவேற்று பேசினர். ஊராட்சி மன்ற பொறுப்பில் உள்ளவர்கள், ஊர் பெரியவர்கள், பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் முன்னிலை வகித்தனர்.



இதில் சோமையனூர் நடுநிலைப்பள்ளி, உச்சையனூர் தொடக்கப்பள்ளி, நஞ்சுண்டாபுரம் தொடக்கப்பள்ளி, இராமநாதபுரம் தொடக்கப்பள்ளி, வரப்பாளையம் தொடக்கப்பள்ளி, பாப்பநாயக்கன்பாளையம் நடுநிலை பள்ளிகளில் படிக்கும் 780 மாணவ மாணவிகளுக்கு ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 5500க்கும் மேற்பட்ட நோட்டு புத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகளை வி.கே.வி குருப்ஸ் சார்பாக நஞ்சுண்டாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் வி.கே.வி.சுந்தரராஜ் வழங்கினார்.



இந்த நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் ரங்கராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னராஜ், முன்னாள் தலைமை ஆசிரியர்கள் மாணிக்கம், சின்ராஜ், ஊராட்சி துணைத்தலைவர் திருநாவுக்கரசு, கவுன்சிலர்கள் சோமசுந்தரம், குமாரசாமி, நாகராஜ், இந்திராணி, சசிகுமார், ஆறுமுகம், புஷ்பலதா, திவியா, கிருஷ்ணவேணி, ஆனந்தன், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...