அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்துக - தமிழக அரசுக்கு டாக்டர்.கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!

உடுமலையில் உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி, நலிவடைந்த அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்த தமிழக அரசு 250 கோடி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.



திருப்பூர்: வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்க்கும் தமிழக அரசு, நலிவடைந்த அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர்.கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். 

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமைந்துள்ள தமிழகத்தின் முதல் சர்க்கரை ஆலையான அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் சண்முகநாதன், தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதை கண்டித்தும், தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வரும் நிலையில் தொழிலாளர்களும், விவசாயிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 



இந்நிலையில், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும், தலைவருமான கிருஷ்ணசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். 



அப்போது, அதிகாரிகளிடம் கரும்பு அரவை மற்றும் உற்பத்தி குறித்தும், ஆலையின் பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பின்பு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, 



அமராவதி சர்க்கரை ஆலையில் பல ஆண்டுகளாக நிர்வாக சீர்கேடுகள் நடக்கிறது. ஆண்டிற்கு 4 லட்சம் டன் ஆக இருந்த அரவை திறன் தற்பொழுது 30,000 டன் அரைப்பதே சவாலாக உள்ளது. 

தமிழக அரசு அமெரிக்கா, ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் முதலீடு செய்வதை தவிர்த்து விட்டு தமிழகத்தில் உள்ள இதுபோன்ற பழமையான நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலம் ஏராளமான விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

முன்பு தினமும் 2000 டன் ஆக இருந்த கரும்பு அரவை தற்பொழுது 500 டன் ஆக குறைந்து உள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான விவசாயிகள் மிகவும் பாதிப்படைகின்றனர். அவ்வப்போது போராட்டங்கள் நடத்துகின்றனர். 

குறிப்பாக சர்க்கரை ஆலைக்கு சம்மதம் இல்லாத மேலாண்மை இயக்குனரை நியமனம் செய்யப்பட்டதே காரணமாகும். தற்போது இவர் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். 

ஏராளமான விவசாயிகள் கரும்பு சாகுபடியை கைவிட்டுள்ளனர். சர்க்கரை ஆலையை புனரமைக்க தமிழக அரசு 250 கோடி வழங்க வேண்டும். இதுபோன்ற ஊழல்கள் மற்றும் நிர்வாக சீர்கேடுகள் தொடர்ந்தால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...