சிதம்பரம் கோவில் தீக்‌ஷிதர்களை கைது செய்ய வேண்டும் - தமிழ்நாடு யாதவர் மகா சபை ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

சிதம்பரம் கோயிலில் கடவுளை வழிபடச் சென்ற யாதவ இன முதியவரை தீக்‌ஷிதர்கள் ஆபாச சொற்களால் பேசி கொலை மிரட்டல் விடுத்து அடித்ததாக கூறி அவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு யாதவர் மகா சபை சார்பில் கோவை மாநகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.



கோவை: சிதம்பரம் கோவில் தீக்‌ஷிதர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு யாதவர் மகா சபை சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிதம்பரம் கோயிலில் கடவுளை வழிபடச் சென்ற யாதவ இன முதியவரை தீக்‌ஷிதர்கள் ஆபாச சொற்களால் பேசி கொலை மிரட்டல் விடுத்து அடித்ததாக கூறி அவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு யாதவர் மகா சபை சார்பில் கோவை மாநகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 

அந்த போஸ்டரில் சிதம்பரம் கோயிலில் சாமி கும்பிட வந்த யாதவர் இன முதியவரை ஆபாச சொற்களால் பேசி, கொலை மிரட்டல் விட்டு, அடித்து தாக்கிய தீக்‌ஷிதர்களை உடனே கைது செய்!, நடராஜர் அனைத்து சாதி மக்களுக்குமானவர்!, தீக்‌ஷிதர்களுக்கு மட்டும் சொந்தம் கொண்டாடாதே!!" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த போஸ்டர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஒட்டப்பட்டுள்ளன. 

அண்மையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யக்கூடாது என்று தீக்‌ஷிதர்களால் வைக்கப்பட்ட பதாகையால் சர்ச்சை கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...