சிதம்பரம் கோவில் தீக்‌ஷிதர்களை கைது செய்ய வேண்டும் - தமிழ்நாடு யாதவர் மகா சபை ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!

சிதம்பரம் கோயிலில் கடவுளை வழிபடச் சென்ற யாதவ இன முதியவரை தீக்‌ஷிதர்கள் ஆபாச சொற்களால் பேசி கொலை மிரட்டல் விடுத்து அடித்ததாக கூறி அவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு யாதவர் மகா சபை சார்பில் கோவை மாநகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.



கோவை: சிதம்பரம் கோவில் தீக்‌ஷிதர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு யாதவர் மகா சபை சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிதம்பரம் கோயிலில் கடவுளை வழிபடச் சென்ற யாதவ இன முதியவரை தீக்‌ஷிதர்கள் ஆபாச சொற்களால் பேசி கொலை மிரட்டல் விடுத்து அடித்ததாக கூறி அவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு யாதவர் மகா சபை சார்பில் கோவை மாநகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 

அந்த போஸ்டரில் சிதம்பரம் கோயிலில் சாமி கும்பிட வந்த யாதவர் இன முதியவரை ஆபாச சொற்களால் பேசி, கொலை மிரட்டல் விட்டு, அடித்து தாக்கிய தீக்‌ஷிதர்களை உடனே கைது செய்!, நடராஜர் அனைத்து சாதி மக்களுக்குமானவர்!, தீக்‌ஷிதர்களுக்கு மட்டும் சொந்தம் கொண்டாடாதே!!" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த போஸ்டர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஒட்டப்பட்டுள்ளன. 

அண்மையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யக்கூடாது என்று தீக்‌ஷிதர்களால் வைக்கப்பட்ட பதாகையால் சர்ச்சை கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...