கோவை தெற்கு தொகுதியில் நியாய விலை கடைகளில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆய்வு!

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம், ராமலிங்கம் காலனி பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.



கோவை: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள நியாயவிலை கடைகளில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். 



கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம், ராமலிங்கம் காலனி பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது, நியாய விலை கடைகளில் இருப்பு வைக்கப்பட்டு இருந்த அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருள்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும், விற்பனை முனைய இயந்திரத்தில் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட பொருள்களின் விவரங்கள், கடைகளில் தற்போது உள்ள இருப்பு குறித்தும் ஆய்வு செய்தார். 



மேலும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இங்கு பொருள்கள் வழங்கப்படுவதை கண்ட அவர் திட்டத்தை கொண்டு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு தனது நன்றியை தெரிவித்தார். 



பாஜக மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் ரேஷன் கடையில் ஆய்வு செய்தது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...