கோவையில் பள்ளிவாசல்கள் முன்பு நிறுத்தப்பட்ட வாகனங்களில் போலீசார் வெடிகுண்டு சோதனை - பரபரப்பு!

பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவையில் உள்ள பள்ளிவாசல்களுக்கு அருகில் நிறுத்தப்பட்ட வாகனங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.



கோவை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள பள்ளிவாசல்களுக்கு அருகில் நிறுத்தப்பட்ட வாகனங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பள்ளிவாசல்கள் மற்றும் மைதானங்களில் திரளான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் எல்லைகளில் இந்திய ராணுவத்தினர் தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் மாநகர காவல்துறை சார்பில் பள்ளிவாசல்கள் அருகே நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலிசார் நவீன கருவிகளை கொண்டு சோதனை மேற்கொண்டனர்.



மேலும் பள்ளிவாசல்கள் அருகே சந்தேகத்திற்கிடமாக வைக்கப்பட்டிருக்கும் பொருட்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...