பக்ரீத் பண்டிகைக்காக பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும் - விஷ்வ இந்து பரிஷத் மனு!

வரும் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகையையொட்டி கோவையின் பல்வேறு பகுதிகளில் இறைச்சிக்காக பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் கோவை ஆட்சியர் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



கோவை: கோவையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதை தடுக்க வலியுறுத்தி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் ஆட்சியர் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, வரும் ஜூன் 29ஆம் தேதி பகரீந்-ஐ முன்னிட்டு கோவையின் செல்வபுரம், உக்கடம், ஆத்துப்பாலம் உள்ளிட்ட பல பகுதிகளில் இறைச்சிக்கான மாடுகள் பொது இடங்களில் கட்டி வைக்கப்பட்டுள்ளன, 

கடந்த வருடங்களில் இது போலவே அரசு அனுமதி பெற்ற இறைச்சி கூடங்களை தவிர்த்து பொது இடங்களில் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளது. அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கால்நடை மருத்துவரின் சான்றிதழ், அரசால் அங்கீகரிக்கப்பட்ட இறைச்சி கூடங்கள் மட்டும் பபன்படுத்துவது போன்ற விதிகளை பின்பற்றாமல் தொடர்ந்து மாடுகள் வெட்ப்படுவதாக அறிகிறோம். 

எனவே இதுபோன்ற நிகழ்வுகள் இந்த வருடம் நடைபெறாமல் முன் கூட்டியே அரசும், காவல்துறையும் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...