பக்ரீத் பண்டிகைக்காக பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும் - விஷ்வ இந்து பரிஷத் மனு!

வரும் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகையையொட்டி கோவையின் பல்வேறு பகுதிகளில் இறைச்சிக்காக பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் கோவை ஆட்சியர் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



கோவை: கோவையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதை தடுக்க வலியுறுத்தி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் ஆட்சியர் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, வரும் ஜூன் 29ஆம் தேதி பகரீந்-ஐ முன்னிட்டு கோவையின் செல்வபுரம், உக்கடம், ஆத்துப்பாலம் உள்ளிட்ட பல பகுதிகளில் இறைச்சிக்கான மாடுகள் பொது இடங்களில் கட்டி வைக்கப்பட்டுள்ளன, 

கடந்த வருடங்களில் இது போலவே அரசு அனுமதி பெற்ற இறைச்சி கூடங்களை தவிர்த்து பொது இடங்களில் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளது. அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கால்நடை மருத்துவரின் சான்றிதழ், அரசால் அங்கீகரிக்கப்பட்ட இறைச்சி கூடங்கள் மட்டும் பபன்படுத்துவது போன்ற விதிகளை பின்பற்றாமல் தொடர்ந்து மாடுகள் வெட்ப்படுவதாக அறிகிறோம். 

எனவே இதுபோன்ற நிகழ்வுகள் இந்த வருடம் நடைபெறாமல் முன் கூட்டியே அரசும், காவல்துறையும் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...