சட்டவிரோதமாக குழாய் பதிக்கும் ஊராட்சி மன்ற தலைவர் - ராஷ்ட்ரிய இந்து மகாசபா மனு!

காரமடை அடுத்த பல்லேபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார், ஆலாங்கொம்பு பகுதியில் இருந்து குமரன் குன்று பகுதி வரை சட்டவிரோதமாக எவ்வித அனுமதியும் பெறாமல் இரவு நேரங்களில் விவசாயத்திற்காக குழாய் பதித்து வருவதை கண்டித்து ராஷ்ட்ரிய இந்து மகா சபா சார்பில் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



கோவை: கோவை காரமடை அருகே ஊராட்சி மன்ற தலைவர் சட்டவிரோதமாக குழாய் பதித்து வருவதை கண்டித்து ராஷ்ட்ரிய இந்து மகா சபா சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம் பல்லேபாளையம் பஞ்சாயத்தில் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள சிவகுமார் அவரது அதிகாரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக அவரது விவசாய தொழிலுக்காக அரசிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் குழாய் பதித்து வருவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராஷ்ட்ரிய இந்து மகாசபா அமைப்பின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மாநில தலைவர் வேலுசாமி தலைமையில் மனு அளிக்க வந்த நபர்கள் தங்கள் கண்களை கருப்புத் துணியால் கட்டிக்கொண்டு, குழாய்களை கையில் ஏந்தி அவர்களது கோரிக்கை வலியுறுத்தினர். 

இதுகுறித்து மாநிலத் தலைவர் வேலுச்சாமி கூறியதாவது, காரமடை ஒன்றியம் பல்லேபாளையம் பஞ்சாயத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார், ஆலாங்கொம்பு பகுதியில் இருந்து குமரன் குன்று பகுதி வரை சட்டவிரோதமாக எவ்வித அனுமதியும் பெறாமல் இரவு நேரங்களில் விவசாயத்திற்காக குழாய் பதித்து வருகிறார். 

இவர் அங்குள்ள அவரது அதிகாரத்தை பயன்படுத்தி இவ்வாறான சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கையில் தோய்வு ஏற்பட்டால், மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...