வால்பாறை எஸ்டேட் பகுதியில் சிறுத்தை புலி தாக்கி பசு மாடு பலி

வால்பாறை அடுத்துள்ள காஞ்சமலை எஸ்டேட் தெற்கு டிவிஷன் பகுதியில் செல்வி என்பவர் கால்நடை விலங்குகளான பசுமாடு உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறார்.



இந்நிலையில், இவரது குடியிருப்பு பகுதியின் அருகாமையில் உள்ள புல்வெளிப் பகுதியில் இவர் வளர்த்துவந்த சுமார் 2 வயது மதிக்கத்தக்க பசுமாடு மேய்ந்துகொண்டிருந்த பொழுது அங்கு வந்த இரு சிறுத்தை புலிகள் பசுமாட்டின் கழுத்துப்பகுதியில் கடித்துக்குதறியது. இதில், பசு மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இதனைக்கண்ட செல்வியின் மகன் கூச்சல் எழுப்பியதில் சிறுத்தைப்புலி அங்கிருந்து தப்பி அறுகாமையில் இருந்த புதர் பகுதிக்குள் ஓடியது.

இச்சம்பவம் குறித்து வால்பாறை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த பசுமாட்டினை உடற்கூறு பரிசோதனை செய்து செல்வியின் வீட்டின் முன்புறப் பகுதியிலேயே புதைத்தனர்.

இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், எஸ்டேட் பகுதியில் காட்டுச்செடிகள் அடர்ந்து வளர்ந்திருப்பதினால் அப்பகுதியில் காட்டுவிலங்குகள் வருவது தெரிவதில்லை. ஆகவே புதர்ச் செடிகளை அகற்றுமாறு எஸ்டேட் நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகிறோம் என்றனர்.

இதேப் போல் வால்பாறை டவுன் பகுதியில் சிறுத்தை புலி தாக்கி எறுமைக் கன்றுக்குட்டி ஒன்று பலத்த காயம் ஏற்பட்டு அறுகாமையில் உள்ள கால்வாயில் விழுந்தது. நான்கு நாட்கள் கழித்து துர்ணாற்றம் வீசியதால் அறுகாமையில் உள்ள கடைக்காரர்கள் நகராட்சிக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் வந்து சுமார் 2 வயது மதிக்கத்தக்க எறுமை கன்றுக்குட்டியின் சடலத்தை அகற்றினர்.



வால்பாறை குடியிருப்பு பகுதியில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மக்கள் வசிக்கும் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தை புலிகளை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...