ராகல்பாவி அரசு துவக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்!

உடுமலை அடுத்த ராகல்பாவி அரசு துவக்கப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில், குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து தகவல் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.



திருப்பூர்: உடுமலை அடுத்த ராகல்பாவி அரசு துவக்கப்பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில், பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. 

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு கூட்டத்திற்கு ராகல்பாவி ஊராட்சி மன்ற தலைவர் சுமதி செழியன் தலைமை வகித்தார். 



இந்த நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்வில், பள்ளி ஆசிரியர் கண்ணபிரான் பேசியதாவது, 2023- 24 ஆம் கல்வியாண்டில் அரசின் நலத்திட்டங்களான புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், புத்தகப் பை ஆகியவை பெறப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட எண்ணும் எழுத்தும் திட்டம் இந்த ஆண்டு முதல் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. 

பள்ளி வயது குழந்தைகள் அனைவரும் பள்ளியில் சேர்க்கப்பட்டு விட்டனர். பள்ளி செல்லா குழந்தைகள் யாரேனும் நமது கிராமத்தில் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார். 

நிறைவாக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் ஸ்ரீநிதி நன்றி கூறினார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...