ராகல்பாவி அரசு துவக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்!

உடுமலை அடுத்த ராகல்பாவி அரசு துவக்கப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில், குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து தகவல் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.



திருப்பூர்: உடுமலை அடுத்த ராகல்பாவி அரசு துவக்கப்பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில், பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. 

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு கூட்டத்திற்கு ராகல்பாவி ஊராட்சி மன்ற தலைவர் சுமதி செழியன் தலைமை வகித்தார். 



இந்த நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்வில், பள்ளி ஆசிரியர் கண்ணபிரான் பேசியதாவது, 2023- 24 ஆம் கல்வியாண்டில் அரசின் நலத்திட்டங்களான புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், புத்தகப் பை ஆகியவை பெறப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட எண்ணும் எழுத்தும் திட்டம் இந்த ஆண்டு முதல் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. 

பள்ளி வயது குழந்தைகள் அனைவரும் பள்ளியில் சேர்க்கப்பட்டு விட்டனர். பள்ளி செல்லா குழந்தைகள் யாரேனும் நமது கிராமத்தில் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார். 

நிறைவாக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் ஸ்ரீநிதி நன்றி கூறினார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...