கோவை மாவட்ட தெற்கு மண்டலம் மற்றும் 76 முதல் 70 வரை உள்ள வார்டுகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களை அமைச்சர் பெயரைக் கூறிக் கொண்டு உதவி ஆணையர் ரவி மற்றும் மண்டல சுகாதார ஆய்வாளர் (பொறுப்பு) லோகநாதன், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் தரக்குறைவாக நடத்துவதாக துப்புரவு தொழிலாளர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், இதுபோன்று துப்புரவு தொழிலாளர்களை தரக்குறைவாக நடத்தும் உதவி ஆணையர் ரவி மற்றும் மண்டல சுகாதார ஆய்வாளர் (பொறுப்பு) லோகநாதன், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகளைக் கண்டித்து மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் வாயில் கருப்பு துணி கட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இந்த போராட்டத்தின் போது துப்புரவு தொழிலாளர்களை தரக்குறைவாக நடத்தும் அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து மாநகராட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.