காரணம்பேட்டை ராக் சிட்டி ரோட்டரி துவக்க விழா - புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு!

காரணம்பேட்டையில் நடைபெற்ற ‘திருப்பூர் மேற்கு காரணம்பேட்டை ராக் சிட்டி ரோட்டரி’ துவக்க விழாவில் சங்கத்தின் பட்டய தலைவராக ராமகிருஷ்ணன், பட்டய செயலாளராக கார்த்திகேயன், பட்டய பொருளாளராக நவீன் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். மேலும் புதிய நிர்வாகிகள் ரோட்டரி சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு செயல்படுவேன் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.



திருப்பூர்: காரணம்பேட்டையில் நடைபெற்ற ‘திருப்பூர் மேற்கு காரணம்பேட்டை ராக் சிட்டி ரோட்டரி’ துவக்க விழாவில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டனர். 



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் இன்று திருப்பூர் மேற்கு காரணம்பேட்டை ராக் சிட்டி ரோட்டரி துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆளுநர் இளங்கோவன் கலந்து கொண்டார். 

இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக பட்டய தலைவராக ராமகிருஷ்ணன், பட்டய செயலாளராக கார்த்திகேயன், பட்டய பொருளாளராக நவீன் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். இதைத்தொடர்ந்து ரோட்டரி உறுப்பினர்களாக ஏராளமானோர் தங்களை இணைத்துக் கொண்டனர். 



மேலும் புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட நிர்வாகிகள் ரோட்டரி சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு செயல்படுவேன் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 

விழாவின் தொடர்ச்சியாக சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஓடந்துறை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இதன் தொடர்ச்சியாக திருப்பூர் மேற்கு ரோட்டரி நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...