நெடுஞ்சாலை அதிகாரிகளை கண்டித்து போத்தனூர் - வெள்ளலூர் சாலையில் பொதுமக்கள் மறியல்!

கோவை போத்தனூர் - வெள்ளலூர் பிரதான சாலை, சித்தன்னபுரம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளை கண்டித்து அப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: போத்தனூர் - வெள்ளலூர் சாலையில் பாதுகாப்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

கோவை போத்தனூர் - வெள்ளலூர் பிரதான சாலை, சித்தன்னபுரம் பகுதியில் சாலையோரங்களில் உள்ள பாதுகாப்பு மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து சுமார் 41 வீடு மற்றும் கடைகள் கட்டப்பட்டுள்ளது. 

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை சித்தன்னபுரம் பகுதிக்கு வந்த சாலை ஆய்வாளர் ஜெலின் தலைமையிலான அதிகாரிகள் அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர். 

அப்போது பொதுமக்கள் சாலை ஆய்வாளரிடம் மேலும் ஒரு நாள் அவகாசம் கொடுத்தால் ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஆய்வாளர் அனுமதி வழங்காததால் நீண்ட நேரம் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியாக ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களின் முன் பகுதிகளை மட்டும் அதிகாரிகள் இடித்துச் சென்றனர். 

இந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் திடீரென நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து இரவில் வெள்ளலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போத்தனூர் போலீசார் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை கலைத்தனர். 

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...