நெடுஞ்சாலை அதிகாரிகளை கண்டித்து போத்தனூர் - வெள்ளலூர் சாலையில் பொதுமக்கள் மறியல்!

கோவை போத்தனூர் - வெள்ளலூர் பிரதான சாலை, சித்தன்னபுரம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளை கண்டித்து அப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: போத்தனூர் - வெள்ளலூர் சாலையில் பாதுகாப்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

கோவை போத்தனூர் - வெள்ளலூர் பிரதான சாலை, சித்தன்னபுரம் பகுதியில் சாலையோரங்களில் உள்ள பாதுகாப்பு மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து சுமார் 41 வீடு மற்றும் கடைகள் கட்டப்பட்டுள்ளது. 

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை சித்தன்னபுரம் பகுதிக்கு வந்த சாலை ஆய்வாளர் ஜெலின் தலைமையிலான அதிகாரிகள் அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர். 

அப்போது பொதுமக்கள் சாலை ஆய்வாளரிடம் மேலும் ஒரு நாள் அவகாசம் கொடுத்தால் ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஆய்வாளர் அனுமதி வழங்காததால் நீண்ட நேரம் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியாக ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களின் முன் பகுதிகளை மட்டும் அதிகாரிகள் இடித்துச் சென்றனர். 

இந்த நிலையில் அப்பகுதி பொதுமக்கள் திடீரென நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து இரவில் வெள்ளலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போத்தனூர் போலீசார் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை கலைத்தனர். 

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...