கோவை சுந்தராபுரத்தில் 10 வயதுடைய சந்தனமரம் வெட்டி கடத்தல்!

சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனியை சேர்ந்த அனந்த பத்மநாபன் என்பவர் தனது வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக வளர்த்து வந்த சந்தன மரத்தை இரவோடு இரவாக மர்ம நபர்கள் வெட்டிக் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: சுந்தராபுரம் பகுதியில் வீட்டு வளாகத்தில் இருந்த 10 ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வந்த சந்தனமரத்தை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனி பகுதியை சேர்ந்த சுப்பிரமணிய சர்மா என்பவரது மகன் அனந்த பத்மநாதன் (45). இவர் ஐடி நிறுவனங்களுக்கு வன்பொருள் சப்ளை செய்யும் பணியை செய்து வருகிறார். இவரது வீட்டின் வளாகத்தில் தானாக வளர்த்த சுமார் 10 ஆண்டுகளான சந்தன மரத்தை பராமரித்து வந்தார்.



நேற்று இரவு 12 மணி வரை சந்தனமரம் இருந்த நிலையில் இன்று காலை 5 மணிக்கு வழக்கம் போல எழுந்து பார்த்த போது, சந்தனமரம் வெட்டப்பட்டு அதன் நடுபகுதியை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.



இதையடுத்து அனந்த பத்மநாதன் சுந்தராபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசார் சந்தனமரத்தை வெட்டி கடத்திச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...