கோவை சுந்தராபுரத்தில் 10 வயதுடைய சந்தனமரம் வெட்டி கடத்தல்!

சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனியை சேர்ந்த அனந்த பத்மநாபன் என்பவர் தனது வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக வளர்த்து வந்த சந்தன மரத்தை இரவோடு இரவாக மர்ம நபர்கள் வெட்டிக் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: சுந்தராபுரம் பகுதியில் வீட்டு வளாகத்தில் இருந்த 10 ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வந்த சந்தனமரத்தை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனி பகுதியை சேர்ந்த சுப்பிரமணிய சர்மா என்பவரது மகன் அனந்த பத்மநாதன் (45). இவர் ஐடி நிறுவனங்களுக்கு வன்பொருள் சப்ளை செய்யும் பணியை செய்து வருகிறார். இவரது வீட்டின் வளாகத்தில் தானாக வளர்த்த சுமார் 10 ஆண்டுகளான சந்தன மரத்தை பராமரித்து வந்தார்.



நேற்று இரவு 12 மணி வரை சந்தனமரம் இருந்த நிலையில் இன்று காலை 5 மணிக்கு வழக்கம் போல எழுந்து பார்த்த போது, சந்தனமரம் வெட்டப்பட்டு அதன் நடுபகுதியை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.



இதையடுத்து அனந்த பத்மநாதன் சுந்தராபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசார் சந்தனமரத்தை வெட்டி கடத்திச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...