6 வருடங்களுக்கு முன் விற்ற சொத்திற்கு முழு பணம் தராத அதிமுக பிரமுகர் - மாற்றுத்திறனாளி மகனுடன் தந்தை தர்ணா!

கோவையில் 6 வருடங்களுக்கு முன்பு சொத்தை வாங்கிய அதிமுக நிர்வாகி புனிதா நாகராஜ் என்பவர் முழு பணத்தையும் கொடுக்காமல் உள்ளதாகவும், கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி சேகர் என்பவர் தனது மாற்றுத்திறனாளி மகனுடன் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.



கோவை: கோவை அருகே சொத்தை வாங்கிய அதிமுக பிரமுகர் முழுமையான பணத்தை வழங்காமல் இழுத்தடிப்பதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மகனுடன் தந்தை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவர் இன்று அவரது மாற்றுத்திறனாளி மகன், உட்பட இரு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் தீடீரென அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டார்.



இது குறித்து அவர் கூறியதாவது, தனது தாயார் சொத்தை கடந்த 6 வருடங்களுக்கு முன் அதிமுகவை சேர்ந்த புனிதா நாகராஜ் என்பவருக்கு விற்பனை செய்தார்.

விற்பனை செய்த பணத்தில் குறிப்பிட்ட தொகையை மட்டும் தனக்கும் சகோதர சகோதரிக்கும் கொடுத்து விட்டு மீதமுள்ள 50,000 ரூபாயை புனிதா நாகராஜ் தராமல் இருக்கிறார்.

தற்போது தாயார் இறந்த நிலையில், மீதமுள்ள பணம் குறித்து கேட்டால் இழிவாக பேசுவதாகவும் பணத்தை தராமல் இழுத்தடிக்கிறார். மேலும் தன்னை அடியாட்கள் வைத்து தாக்கி அதிமுகவில் இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி தங்கள் இருக்கும் வீட்டை காலி செய்ய வைப்பதாகவும் எங்கு சென்றாலும் தங்களை பற்றி குற்றம் கூறி அவப்பெயரை உண்டாக்குகிறார்.

மேலும் தன்னை தாக்கி விட்டு காவல் நிலையத்தில் தங்கள் மீது புகார் தெரிவித்து தன்னை கைது செய்ய முயன்றார். எனவே நானும் குடும்பத்தினரும் என்ன செய்வதென்றே தெரியாமல் நிர்கதியாய் நிற்கிறோம்.

இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கண்டு எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை அதிமுகவை சேர்ந்த புனிதா நாகராஜிடம் இருந்து பெற்று தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் அழைத்து சென்றனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...