6 வருடங்களுக்கு முன் விற்ற சொத்திற்கு முழு பணம் தராத அதிமுக பிரமுகர் - மாற்றுத்திறனாளி மகனுடன் தந்தை தர்ணா!

கோவையில் 6 வருடங்களுக்கு முன்பு சொத்தை வாங்கிய அதிமுக நிர்வாகி புனிதா நாகராஜ் என்பவர் முழு பணத்தையும் கொடுக்காமல் உள்ளதாகவும், கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி சேகர் என்பவர் தனது மாற்றுத்திறனாளி மகனுடன் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.



கோவை: கோவை அருகே சொத்தை வாங்கிய அதிமுக பிரமுகர் முழுமையான பணத்தை வழங்காமல் இழுத்தடிப்பதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மகனுடன் தந்தை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவர் இன்று அவரது மாற்றுத்திறனாளி மகன், உட்பட இரு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் தீடீரென அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டார்.



இது குறித்து அவர் கூறியதாவது, தனது தாயார் சொத்தை கடந்த 6 வருடங்களுக்கு முன் அதிமுகவை சேர்ந்த புனிதா நாகராஜ் என்பவருக்கு விற்பனை செய்தார்.

விற்பனை செய்த பணத்தில் குறிப்பிட்ட தொகையை மட்டும் தனக்கும் சகோதர சகோதரிக்கும் கொடுத்து விட்டு மீதமுள்ள 50,000 ரூபாயை புனிதா நாகராஜ் தராமல் இருக்கிறார்.

தற்போது தாயார் இறந்த நிலையில், மீதமுள்ள பணம் குறித்து கேட்டால் இழிவாக பேசுவதாகவும் பணத்தை தராமல் இழுத்தடிக்கிறார். மேலும் தன்னை அடியாட்கள் வைத்து தாக்கி அதிமுகவில் இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி தங்கள் இருக்கும் வீட்டை காலி செய்ய வைப்பதாகவும் எங்கு சென்றாலும் தங்களை பற்றி குற்றம் கூறி அவப்பெயரை உண்டாக்குகிறார்.

மேலும் தன்னை தாக்கி விட்டு காவல் நிலையத்தில் தங்கள் மீது புகார் தெரிவித்து தன்னை கைது செய்ய முயன்றார். எனவே நானும் குடும்பத்தினரும் என்ன செய்வதென்றே தெரியாமல் நிர்கதியாய் நிற்கிறோம்.

இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கண்டு எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை அதிமுகவை சேர்ந்த புனிதா நாகராஜிடம் இருந்து பெற்று தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் அழைத்து சென்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...