துடியலூர் சூழாத்தம்மன் கோவிலில் 7 ஆம் ஆண்டு திருவிழா கோலாகலம்!

கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி சூழாத்தம்மன் திருக்கோவில் 7ம் ஆண்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவிலில் பராசக்தியாகம், சிறப்பு அலங்கார பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


கோவை: துடியலூர் அருகேயுள்ள தொப்பம்பட்டி சூழாத்தம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி ராஜராஜேஸ்வரி நகரில் ஸ்ரீ சூழாத்தம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் 7ஆம் ஆண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.



இந்த நிகழ்வில் அம்மனுக்கு பராசக்தியாகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.



இதன் முதல் நிகழ்வாக ஸ்ரீ விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கி, விக்னேஸ்வர பூஜை, புண்ணிய யாக வாஜசன், பஞ்ச கவ்ய பூஜை சந்த்கல்பம், கிச்சா சக்தி, ஞானசக்தி, மூல மந்திரம், மாலா மந்திர ஹோமம், மகா பூர்ணாவதி தீபாரதனையை தொடர்ந்து அம்மனுக்கு 11 விதமான அபிஷேகமும், கலச அபிஷேக அலங்கார அர்ச்சனை மகா தீபாரதனை நடைபெற்றது.



தொடர்ந்து பக்த்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...