திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றித்திரிந்த பாம்புகளை பத்திரமாக மீட்ட வனத்துறை!

திருப்பூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறத்தில் இருந்த முட்புதர்களுக்கு அருகே பாம்புகள் சுற்றித்திரிந்துள்ளன. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், பாம்புகளை பத்திரமாக மீட்ட வனத்துறையினர், அதனை வனப்பகுதியில் விட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரிந்த பாம்புகளை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர். 

திருப்பூர் - பல்லடம் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் பல்வேறு அரசு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பல்வேறு சேவைகளை பெற தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்லக்கூடிய நிலையில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்கள் பணிக்கு வந்துள்ளனர். 

அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்புறத்தில் பாம்புகள் சென்றது தெரியவந்தது, இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 



தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் 2 பாம்புகளை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விடுவதற்காக எடுத்துச் சென்றனர். 

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 



இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்புறம் ஜேசிபி வாகனம் மூலம் புதர்கள் இன்றி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...