மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டிய கல்லூரி மாணவர் - மடக்கி பிடித்த பொதுமக்கள்!

கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை அச்சத்திற்குள்ளாக்கிய சுந்தராபுரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் (21) என்பவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த இளைஞரை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

கோவை: பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டிய இளைஞரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். 

கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு வழக்கம் போல அதிகளவு வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையில் மலுமிச்சம்பட்டியில் இருந்து சுந்தராபுரம் நோக்கி வந்த கார் ஒன்று அதிவேகமாக வந்ததோடு, எல்ஐசி காலனி அருகே வரும்போது இடதுபுறமும், வலது புறமும் வளைந்து வளைந்து சென்றதாக தெரிகிறது.

இதனால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தினர். அதே நேரத்தில் காரின் பின்னால் வந்த மற்ற இளைஞர்கள் வேகமாக துரத்தி சென்று காரை மடக்கி பிடித்தனர். அப்போது அந்த காரை ஓட்டி வந்த இளைஞர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போக்குவரத்து  போலீசார் இளைஞரை சோதனை செய்தபோது அவர் மது போதையில் இருந்தது உறுதியானது. 

இந்நிலையில் காரை பறிமுதல் செய்த போலீசார் வேறு இடத்திற்கு எடுத்துச் சென்றனர். விசாரணையில் பிடிபட்ட இளைஞர் சுந்தராபுரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் (21) என்பதும், இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து இளைஞர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் காரை வேகமாகவும் மது போதைகளும் இயக்கி வந்ததற்காக அபராதம் விதித்தனர். மேலும் இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட கூடாது என எச்சரித்து அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 

மது போதை இளைஞரால் சுந்தராபுரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

துடியலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து, தொகுதி மறுவரையறை மசோ...

தாராபுரத்தில் திமுக இளைஞரணி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!

தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை கண்டித்து, மத்திய அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாராபுரம் கிழக்கு மாவட்ட தி...

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...