மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டிய கல்லூரி மாணவர் - மடக்கி பிடித்த பொதுமக்கள்!

கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை அச்சத்திற்குள்ளாக்கிய சுந்தராபுரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் (21) என்பவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த இளைஞரை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

கோவை: பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டிய இளைஞரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். 

கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு வழக்கம் போல அதிகளவு வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையில் மலுமிச்சம்பட்டியில் இருந்து சுந்தராபுரம் நோக்கி வந்த கார் ஒன்று அதிவேகமாக வந்ததோடு, எல்ஐசி காலனி அருகே வரும்போது இடதுபுறமும், வலது புறமும் வளைந்து வளைந்து சென்றதாக தெரிகிறது.

இதனால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தினர். அதே நேரத்தில் காரின் பின்னால் வந்த மற்ற இளைஞர்கள் வேகமாக துரத்தி சென்று காரை மடக்கி பிடித்தனர். அப்போது அந்த காரை ஓட்டி வந்த இளைஞர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போக்குவரத்து  போலீசார் இளைஞரை சோதனை செய்தபோது அவர் மது போதையில் இருந்தது உறுதியானது. 

இந்நிலையில் காரை பறிமுதல் செய்த போலீசார் வேறு இடத்திற்கு எடுத்துச் சென்றனர். விசாரணையில் பிடிபட்ட இளைஞர் சுந்தராபுரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் (21) என்பதும், இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து இளைஞர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் காரை வேகமாகவும் மது போதைகளும் இயக்கி வந்ததற்காக அபராதம் விதித்தனர். மேலும் இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட கூடாது என எச்சரித்து அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 

மது போதை இளைஞரால் சுந்தராபுரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...