கோவை அருகே பெண்ணிடம் 10.5 சவரன் நகை பறிப்பு - இளைஞர் கைது!

கோவை பீளமேடு அருகே பேன்சி ஸ்டோர் நடத்தி வரும் பொன்மணி (57) என்பவரது கடைக்கு வந்த நபர் பொருட்கள் வாங்குவது போல், பொன்மணியின் கழுத்தில் இருந்த 10.5 சவரன் நகையை பறித்து சென்ற நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் அந்த நபரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கோவை: பீளமேடு அருகே பேன்சி ஸ்டோர் உரிமையாளரின் கழுத்தில் இருந்த 10.5 சவரன் நகையை பறித்துச் செல்ல முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கோவை மாவட்டம் பீளமேடு அடுத்த கள்ளிமேடு வீதியை சேர்ந்தவர் பொன்மணி (57). வீட்டோடு இணைத்து ஃபேன்சி ஸ்டோர் நடத்தி வரும் இவர், நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் கடையை அடைக்கும் முன் மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார்.

அந்த மர்ம நபர், பொருட்கள் வாங்குவது போல வந்து பொன்மணியின் கழுத்தில் இருந்த 10.5 சவரன் தங்க நகை பறித்து தப்பி சென்றார். பொன்மணி கூச்சலிடவே அங்கிருந்தவர்கள் ஓடி வந்து தப்ப முயன்ற இளைஞரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் பீளமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், நடத்திய விசாரணையில் பிடிபட்டவர் பீளமேடு பகுதியை சேர்ந்த அர்ஜுன் (38) என்பது தெரியவந்தது. தொடர்ந்து, பீளமேடு போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்,

இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...