கோவை அருகே பெண்ணிடம் 10.5 சவரன் நகை பறிப்பு - இளைஞர் கைது!

கோவை பீளமேடு அருகே பேன்சி ஸ்டோர் நடத்தி வரும் பொன்மணி (57) என்பவரது கடைக்கு வந்த நபர் பொருட்கள் வாங்குவது போல், பொன்மணியின் கழுத்தில் இருந்த 10.5 சவரன் நகையை பறித்து சென்ற நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் அந்த நபரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கோவை: பீளமேடு அருகே பேன்சி ஸ்டோர் உரிமையாளரின் கழுத்தில் இருந்த 10.5 சவரன் நகையை பறித்துச் செல்ல முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கோவை மாவட்டம் பீளமேடு அடுத்த கள்ளிமேடு வீதியை சேர்ந்தவர் பொன்மணி (57). வீட்டோடு இணைத்து ஃபேன்சி ஸ்டோர் நடத்தி வரும் இவர், நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் கடையை அடைக்கும் முன் மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார்.

அந்த மர்ம நபர், பொருட்கள் வாங்குவது போல வந்து பொன்மணியின் கழுத்தில் இருந்த 10.5 சவரன் தங்க நகை பறித்து தப்பி சென்றார். பொன்மணி கூச்சலிடவே அங்கிருந்தவர்கள் ஓடி வந்து தப்ப முயன்ற இளைஞரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் பீளமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், நடத்திய விசாரணையில் பிடிபட்டவர் பீளமேடு பகுதியை சேர்ந்த அர்ஜுன் (38) என்பது தெரியவந்தது. தொடர்ந்து, பீளமேடு போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்,

இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...