சூலூர் ரயில் நிலையம், பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது!

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, சூலூர் ரயில் நிலையம், மற்றும் பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சூலூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த முத்துகாதர் (29) என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை: கோவை மாவட்டம் சூலூர் ரயில் நிலையம், மற்றும் பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த நபர் ஒருவர் கோவை சூலூர் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் வெடிக்குண்டு வைத்திருப்பதாக சிலர் பேசிக்கொள்வதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து அவருக்கு மீண்டும் போலீசார் அழைத்த போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன் தலைமையிலான போலீசார் சூலூர் ரயில் நிலையம், பேருந்து நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் மீண்டும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த செல்போன் எண் மீண்டும் ஆன் செய்யப்பட்டதால், செல்போன் சிக்னலை வைத்து சூலூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் இருந்த முத்துகாதர் (29) என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

உக்கடம் பகுதியில் இருந்து கடத்த 2 மாதங்களுக்கு முன் சூலூரில் குடியேறிய முத்துகாதர் மது போதையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து தவறான தவலை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...