சூலூர் ரயில் நிலையம், பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது!

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, சூலூர் ரயில் நிலையம், மற்றும் பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சூலூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த முத்துகாதர் (29) என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை: கோவை மாவட்டம் சூலூர் ரயில் நிலையம், மற்றும் பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த நபர் ஒருவர் கோவை சூலூர் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் வெடிக்குண்டு வைத்திருப்பதாக சிலர் பேசிக்கொள்வதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து அவருக்கு மீண்டும் போலீசார் அழைத்த போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன் தலைமையிலான போலீசார் சூலூர் ரயில் நிலையம், பேருந்து நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் மீண்டும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த செல்போன் எண் மீண்டும் ஆன் செய்யப்பட்டதால், செல்போன் சிக்னலை வைத்து சூலூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் இருந்த முத்துகாதர் (29) என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

உக்கடம் பகுதியில் இருந்து கடத்த 2 மாதங்களுக்கு முன் சூலூரில் குடியேறிய முத்துகாதர் மது போதையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து தவறான தவலை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...