திருப்பூரில் மக்கள் நீதிமன்றம் - 323 வழக்குகளுக்கு தீர்வு!

திருப்பூர் மாவட்டத்தில் இன்று சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்வு நடைபெற்றது. இதில் 1625 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, விசாரணை நடத்தப்பட்ட நிலையில் 323 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு, 17 கோடியே 71 லட்சத்து 7 ஆயிரத்து 67 ரூபாய் இழப்பீடாக பெற்று தரப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் நிகழ்வில் 323 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் 7 அமர்வுகளாக இன்று சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்வு நடைபெற்றது. 



திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ. நடராஜன் தலைமையேற்று சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை துவக்கி வைத்தார். 

ஏழு அமர்வுகளாக நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 1625 வழக்கில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதில் 323 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 17 கோடியே 71 லட்சத்து 7 ஆயிரத்து 67 ரூபாய் மதிப்புள்ள இழப்பீடுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...