பல்லடம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது!

பல்லடம் சுற்றுவட்டார பகுதியான பொங்கலூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டையை சேர்ந்த ராஜா மற்றும் முனியசாமி, திருப்பூரை சேர்ந்த மலையரசன் ஆகியோரை அவிநாசிபாளையம் போலீசார் கைது செய்தனர். விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் பகுதியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம், அவிநாசிபாளையம், காமநாயக்கன் பாளையம் மற்றும் மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடை மற்றும் பார்களில் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகின. 

இந்த நிலையில் அப்பகுதிகளில் போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தினர். கடந்த மூன்று நாட்களாக போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் நிலையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த மூன்று பேரை கைது செய்துள்ளனர். 



அதன்படி பொங்கலூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டையை சேர்ந்த ராஜா மற்றும் முனியசாமி, திருப்பூரை சேர்ந்த மலையரசன் ஆகியோரை அவிநாசிபாளையம் காவல்துறையினர் கைது செய்தனர். 



மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். 

பல்லடம் சரக காவல் துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கையால் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை குறைந்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கைகள் தொடர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...