மதுக்கரையில் சத்துணவு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

சத்துணவு அமைப்பாளர்களுக்கு உணவு ஊட்டச்சத்து செலவின தொகையை வழங்க லஞ்சம் தர மறுத்த இருவரை பணியிட மாற்றம் செய்த மதுக்கரை ஊராட்சி ஒன்றிய சத்துணவு திட்ட ஆணையர் கணேசனை கண்டித்து சத்துணவு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: மதுக்கரை ஊராட்சி ஒன்றிய சத்துணவு திட்ட ஆணையரை கண்டித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை பிச்சனூர் அரசு பள்ளி அமைப்பாளராக பணியாற்றி வந்த சோமசுந்தரம் மற்றும் சுந்தராபுரம் செங்கோட்டையார் அரசு பள்ளி அமைப்பாளர் நாகமணி ஆகிய இருவரையும் மதுக்கரை ஊராட்சி ஒன்றிய சத்துணவுத் திட்ட ஆணையர் கணேசன் பணியிடமாற்றம் செய்துள்ளார்.

இந்த பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக உணவு ஊட்டச்சத்து செலவின தொகையை அமைப்பாளர்களுக்கு வழங்க சத்துணவு திட்ட ஆணையர் கணேசன், லஞ்சம் கேட்டதாகவும், அந்த லஞ்சத்தை தர மறுத்த சோமசுந்தரம் மற்றும் நாகமணி ஆகிய இருவரையும் பணியிட மாற்றம் செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

எனவே உடனடியாக அவர்களது பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சத்துணவு திட்ட ஆணையர் கணேசனை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும் வரும் 20 ஆம் தேதிக்குள் பணியிட மாற்றத்தை ரத்து செய்யவில்லை என்றால், அடுத்த கட்டமாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.

ஒன்றிய தலைவர் ஆனந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் நித்திய பிரியா, ஜெகநாதன் உள்ளிட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...