சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வை ஏற்படுத்திய குழந்தைகள்!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவையில் மக்கள் பசுமை இயக்கம் சார்பில் சுற்றுச்சூழல் குறித்தும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்தும் மக்களுக்கு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் குழந்தைகள் மரங்களை போன்று வேடமிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினர்.



கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மக்கள் பசுமை இயக்கம் சார்பில் குழந்தைகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இன்றைய தினம் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவையில் மக்கள் பசுமை இயக்கம் சார்பில் சுற்றுச்சூழல் குறித்தும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்தும் மக்களுக்கு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மக்கள் பசுமை இயக்கத்தினர் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் மரங்கள் நடுவதற்கு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 



இதனையடுத்து பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு துவங்கப்பட்டது.



இதில் குழந்தைகள் மரங்களை போன்று வேடமிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினர்.

Newsletter

கோவை: திமுக கவுன்சிலர்கள் இருவர் அதிமுகவில் இணைந்தனர்; CPI கவுன்சிலர் ராஜினாமா

கோயம்புத்தூரில் திமுகவைச் சேர்ந்த இரு மாநகராட்சி உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்த நிலையில், சிபிஐ கவுன்சிலர் ஒருவர் கட்சி...

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...