திருப்பூரில் சுகாதாரமற்ற முறையில் குடிநீர் பாட்டில் விற்பனை செய்த பேக்கரிக்கு நோட்டீஸ்!

மங்கலம் சாலை அடுத்த எஸ்.ஆர். நகரில் செயல்பட்டு வந்த பேக்கரி ஒன்றில் சுகாதாரமற்ற நிலையில், குடிநீர் பாட்டில் விற்பனை குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பேக்கரியில் நடத்திய சோதனையில், அழுகிய உருளைக்கிழங்கு தேதி குறிப்பிடாத தின்பண்டங்கள் இருந்தது குறித்து பேக்கரிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூரில் சுகாதாரமற்ற முறையில் குடிநீர் பாட்டிலை விற்பனை செய்த பேக்கரிக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.



திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மங்கலம் சாலை அடுத்த எஸ்.ஆர். நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ நீலாம்பிகை அய்யங்கார் பேக்கரியில் வாடிக்கையாளர் ஒருவர் 2 லிட்டர் தண்ணீர் கேன் வாங்கியுள்ளார். அந்த தண்ணீரில் குப்பை மற்றும் பாசி படிந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

இதுகுறித்து அந்த நபர் கடை ஊழியர்களிடம் கேட்டபோது உரிய பதிலளிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்துள்ளார்.



இந்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளர் ரவி தலைமையிலான அதிகாரிகள் கடையில் இருந்த பாட்டில்களை ஆய்வு செய்தனர்.



அதில் தூசிகள் இருந்ததால் அந்த பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 



தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த கடை உணவு பாதுகாப்பு துறை சான்றிதழ் பெறாமல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. மேலும், ஆய்வு செய்யும் பொழுது அழுகிய உருளைக்கிழங்கு தேதி குறிப்பிடாத தின்பண்டங்கள் மற்றும் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கடைக்கு நோட்டீஸ் கொடுத்து விளக்கம் கேட்டுள்ளனர் மேலும் அங்கு பறிமுதல் செய்யப்பட்ட குடிநீர் பாட்டிலை ஆய்வுக்கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Newsletter

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...