கோவை எஸ்.பி தலைமையில் காவலர்களுக்கான குறைதீர்ப்பு முகாம்!

கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் தலைமையில் கோவை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் காவலர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், சட்டம் ஒழுங்கு, ஆயுதப்படை உள்ளிட்ட காவலர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக எஸ்.பி-யிடம் அளித்தனர்.



கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.



கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், தலைமையில் கோவை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர் முதல் சார்பு ஆய்வாளர் வரை உள்ள காவல் துறையினருக்கு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. 



இக்குறைதீர்க்கும் முகாமில் காவல்துறையினர் சுமார் 183 பேரிடம் காவல் கண்காணிப்பாளர் குறைகளைக் கேட்டறிந்தும், அவர்களிடம் இருந்து குறைதீர்க்கும் மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.



அம்மனுக்களை பெற்றுக் கொண்டு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அமைச்சுப் பணியாளர்களுக்கு உத்தரவு வழங்கினார். 



மேலும், மனுக்கள் மீது துரிதமான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தெரிவித்தார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...