கோவை எஸ்.பி தலைமையில் காவலர்களுக்கான குறைதீர்ப்பு முகாம்!

கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் தலைமையில் கோவை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் காவலர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், சட்டம் ஒழுங்கு, ஆயுதப்படை உள்ளிட்ட காவலர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக எஸ்.பி-யிடம் அளித்தனர்.



கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.



கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், தலைமையில் கோவை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர் முதல் சார்பு ஆய்வாளர் வரை உள்ள காவல் துறையினருக்கு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. 



இக்குறைதீர்க்கும் முகாமில் காவல்துறையினர் சுமார் 183 பேரிடம் காவல் கண்காணிப்பாளர் குறைகளைக் கேட்டறிந்தும், அவர்களிடம் இருந்து குறைதீர்க்கும் மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.



அம்மனுக்களை பெற்றுக் கொண்டு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அமைச்சுப் பணியாளர்களுக்கு உத்தரவு வழங்கினார். 



மேலும், மனுக்கள் மீது துரிதமான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...