கோவை வேளாண் பல்கலை.-யில் உழவர்‌ உற்பத்தியாளர்‌ சங்கங்களுக்கான மேலாண்மை பயிற்சி!

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ தமிழ்நாடு சிறு விவசாயிகள்‌ வேளாண்‌ வணிகக்‌ கூட்டமைப்பின்‌ கீழ்‌ இயங்கும்‌ உழவர்‌ உற்பத்தியாளர்‌ சங்கங்களுக்கான மேலாண்மை பயிற்சி இன்று (மே.31) தொடங்கியது. ஜூன்.1 மற்றும் 2ஆம் தேதி வரை பயிற்சி நடைபெறும் என அறிவிப்பு

கோவை: கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில், உழவர்‌ உற்பத்தியாளர்‌ சங்கங்களுக்கான மேலாண்மை பயிற்சி இன்று தொடங்கியது. 

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப வணிக காப்பகத்தில் உள்ள வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ தமிழ்நாடு சிறு விவசாயிகள்‌ வேளாண்‌ வணிகக்‌ கூட்டமைப்பின்‌ கீழ்‌ இயங்கும்‌ உழவர்‌ உற்பத்தியாளர்‌ சஙகங்களுக்கான மேலாண்மை பயிற்சி இன்று தொடங்கியது. இன்று தொடங்கிய இந்த பயிற்சியானது ஜூன் 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சி வேளாண்‌ விற்பனை மற்றும்‌ வணிகத்துறையின்‌ துணையோடு கோவை‌, திருப்பூர்‌ மற்றும்‌ ஈரோடு மாவட்டங்களில்‌ உள்ள 1005ஐ சேர்ந்த சுமார்‌ 80 விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது. வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தின்‌ இயக்குனர்‌ முனைவர்‌ ஏ.சோமசுந்தரம்‌ பயிற்சியை துவக்கி வைத்து வேளாண்‌ வணிகத்திற்கான வாய்ப்புகளை குறித்து விரிவுரை வழங்கினார்‌.

தொழில்நுட்ப வணிக காப்பகத்தின்‌ தலைமை செயல்‌ அதிகாரி, ஞான சம்பந்தம்‌, அவர்கள்‌ வரவேற்புரையாற்றினார்‌. முனைவர்‌ சாந்த சீலா மற்றும்‌ முனைவர்‌ மலர்கொடி விவசாயிகளிடம்‌ உரை நிகழ்த்தினர்‌.

துறை சார்ந்த வல்லுநர்களைக்‌ கொண்டு அங்கக விவசாயிகளுக்கான உழவர்‌ உற்பத்தியாளர்‌ சங்கம்‌ உருவாக்குதல், உழவர்‌ உற்பத்தியாளர்‌ சங்கங்களுக்கான சட்ட திட்டங்கள்‌, உற்பத்தி பொருட்களுக்கான வாய்ப்புகள்‌ மற்றும்‌ சவால்கள், நிர்வாகம்‌, விளை பொருட்களின்‌ விலை நிர்ணயம்‌ மற்றும்‌ ஏற்றுமதி, நிதி மேலாண்மை, தலைமைத்துவ திறன்‌ மேம்பாடு மற்றும்‌ குழு உருவாக்கம்‌, தோட்டக்கலை பயிர்களின்‌ மதிப்புக்கூட்டல்‌ ஆகிய தலைப்புகளில்‌ பயிற்சி நடைபெறுகிறது.

இப்பயிற்சிக்கு பின்‌ ஒரு நாள்‌ விவசாய கண்டுணர்‌ சுற்றுலா தமிழகத்திலும்‌ மற்றும்‌ 5 நாள்‌ விவசாய சுற்றுலா அண்டை மாநிலத்திலும்‌ நடைபெறும்‌. இப்பயிற்சி தொடக்கநிலை உள்ள உழவர்‌ உற்பத்தியாளர்‌ சங்ககங்களுக்கு வேளாண்‌ வணிகம்‌ சார்ந்த சவால்களை எதிர்‌ கொள்ளவும்‌ திறனை மேம்படுத்தி கொள்ளவும்‌ ஒரு வாய்ப்பாக அமையும்‌.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ தொழில்நுட்ப ஆதரவுடன்‌ தமிழ்நாடு சிறு விவசாயிகள்‌ வேளாண்‌ வணிகக்‌ கூட்டமைப்பானது 318 உழவர்‌ அமைப்புகளில்‌ உறுப்பினர்களை வேளாண்‌ தொழில்‌ முனைவோராக மாற்றுவதற்கு இதே போன்ற பயிற்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...