இடுவாய் பகுதியில் அமையவுள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு - பொதுமக்கள் உண்ணாவிரதம்!

பல்லடம் அருகே இடுவாய் கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் அமையவுள்ள அரசு மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகளுடன், பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர்: பல்லடம் அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் புதிதாக அமையவுள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்லடம் அருகே இடுவாய் கிராமத்தில் 2,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் ஊருக்கு வெளியில் அரசு மதுபான கடை எண்:2300 இயங்கி வருகிறது. இந்த கடையை குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் புதிதாக கட்டிடம் ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது.

மதுபான கடைக்கு வரும் நபர்களால் அப்பகுதியில் வசிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல அச்சமாக உள்ளது. விபத்துக்கள் அதிக அளவில் நடக்கிறது.



குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் மதுபான கடையை அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திடமும் காவல்துறையிடமும் அப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால், குழந்தைகளுடன், பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்பு பட்டை அணிந்து, மதுக்கடையை குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் கொண்டு வர வேண்டாம் என்ற பதாகைகளுடன் இன்று முதல் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

புதிதாக அமைக்கப்படவுள்ள மதுக்கடையை அகற்றாவிட்டால் போராட்டம் தொடரும் எனவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...