கனிமவளங்களை பாதுகாக்க கோரி கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் வாகன பிரச்சாரம்!

கோவையில் இருந்து கேரளா மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கும் கனிம வளங்கள் சட்டவிரோதமாக கடத்தி செல்லப்படுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கனிம வளங்களை பாதுகாக்க கோரி கோவை செட்டிபாளையம் பகுதியில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

கோவையின் கனிம வளங்களை பாதுகாக்க கோரியும், கனிம வளங்கள் எடுத்துச் செல்ல மிகப்பெரிய அளவில் வெளிப்படையான மாமுல் வசூல் செய்யப்படுவதை தடுத்து நிறுத்த கோரியும், மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பாக வாகன ஒலிபெருக்கி பிரச்சாரம் செய்ய மாவட்ட காவல்துறையிடம் அந்த இயக்கத்தினர் மனு அளித்தனர்.

ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கோவை செட்டிபாளையம் பகுதியில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கனிம வளங்களை பாதுகாக்க கோரி பிரச்சார பயணத்தை துவங்கினர். 



இயக்கத்தின் தலைவர் வே.ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சார பயணத்தில் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது பிரச்சான பயணத்தில் பேசிய வே.ஈஸ்வரன் கூறியதாவது, கோவை மாவட்டத்தில் செட்டிபாளையம், வாளையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனிம வளங்கள் அதிக எடுக்கப்பட்டு கேரளாவிற்கும், பிற மாவட்டங்களுக்கும் அதிகளவு எடுத்துச் செல்லப்படுகிறது. 

ஒரு சில இடங்களில் விதிமீறல்களுடன் கனிமவள கொள்ளை நடைபெற்று வருகிறது. அதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தவில்லை. உடனடியாக கோவையில் உள்ள கனிம வளங்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் கனிம வளங்களை சட்டவிரோதமாக கடத்திச் செல்ல நடைபெறும் வசூல் வேட்டைகளையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...