கனிமவளங்களை பாதுகாக்க கோரி கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் வாகன பிரச்சாரம்!

கோவையில் இருந்து கேரளா மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கும் கனிம வளங்கள் சட்டவிரோதமாக கடத்தி செல்லப்படுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கனிம வளங்களை பாதுகாக்க கோரி கோவை செட்டிபாளையம் பகுதியில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

கோவையின் கனிம வளங்களை பாதுகாக்க கோரியும், கனிம வளங்கள் எடுத்துச் செல்ல மிகப்பெரிய அளவில் வெளிப்படையான மாமுல் வசூல் செய்யப்படுவதை தடுத்து நிறுத்த கோரியும், மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பாக வாகன ஒலிபெருக்கி பிரச்சாரம் செய்ய மாவட்ட காவல்துறையிடம் அந்த இயக்கத்தினர் மனு அளித்தனர்.

ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கோவை செட்டிபாளையம் பகுதியில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கனிம வளங்களை பாதுகாக்க கோரி பிரச்சார பயணத்தை துவங்கினர். 



இயக்கத்தின் தலைவர் வே.ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சார பயணத்தில் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது பிரச்சான பயணத்தில் பேசிய வே.ஈஸ்வரன் கூறியதாவது, கோவை மாவட்டத்தில் செட்டிபாளையம், வாளையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனிம வளங்கள் அதிக எடுக்கப்பட்டு கேரளாவிற்கும், பிற மாவட்டங்களுக்கும் அதிகளவு எடுத்துச் செல்லப்படுகிறது. 

ஒரு சில இடங்களில் விதிமீறல்களுடன் கனிமவள கொள்ளை நடைபெற்று வருகிறது. அதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தவில்லை. உடனடியாக கோவையில் உள்ள கனிம வளங்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் கனிம வளங்களை சட்டவிரோதமாக கடத்திச் செல்ல நடைபெறும் வசூல் வேட்டைகளையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...