வால்பாறை பிர்லா அருவியில் புகைப்படம் எடுத்த போது தவறி விழுந்து சுற்றுலா பயணி மாயம்!

வால்பாறைக்கு சுற்றுலா வந்த கோவையை சேர்ந்த ஜாகர் (21) பிர்லா அருவியில் புகைப்படம் எடுக்கும் போது தவறி விழுந்து நீரில் மூழ்கிய மாயமான நிலையில், தகவலின் பேரில் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினர் மாயமான இளைஞரை தேடும்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை: வால்பாறைக்கு சுற்றுலா வந்த இளைஞர் ஒருவர் பிர்லா அருவியில் புகைப்படம் எடுத்த போது நீரில் மூழ்கி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ஜாஜூ என்பவரது மகன் ஜாகர் (21). இவர் தனது பெண் தோழியுடன் வால்பாறைக்கு நேற்று சுற்றுலா வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வால்பாறை பகுதியில் சுற்றி பார்த்துவிட்டு இன்று காலை வால்பாறை அருகே சோலையாறு எஸ்டேட் பகுதியில் உள்ள பிர்லா பால்ஸ் அருவிக்கு சென்றுள்ளனர்.

அங்கு அருவி அருகில் சென்று புகைப்படம் எடுக்க முயன்றபோது கால் தவறி ஜாகர் தண்ணிருக்குள் விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற அவரது தோழியும் தண்ணிரில் குதித்துள்ளார். ஜாகர் நீரில் மூழ்கிய நிலையில், அந்த பெண் தண்ணிரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

தண்ணிரில் மூழ்கிய நண்பரை அருகில் உள்ளவர்கள் உதவியுடன் காப்பாற்ற முயன்றுள்ளார்.



இதனையடுத்து தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நீரில் மூழ்கியவரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



புகைப்படம் எடுக்க சென்று நீரில் மூழ்கி வாலிபர் மாயமான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...